அரசு தொழில் பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை

அரசு தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இதுகுறித்து பெங்களூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஒசூர் சாலையில் உள்ள அரசு மாதிரி தொழில்பயிற்சி மையத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நடக்கவிருக்கிறது. கணினி நிரல் உதவியாளர், டிரெஸ் மேக்கிங், வெல்டர், டிராட்ஸ்மேன் சிவில், டிராட்ஸ்மேன் மெக்கானிக், தகவல்தொடர்பு தொழில்நுட்பம்-பராமரிப்பு, டூல் அண்ட் டை மேக்கர்(ஜிக்ஸ் அண்ட் ஃபிக்ஷர்ஸ்), டர்னர் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓராண்டு பயிற்சிக்கு ரூ.1500, ஈராண்டு பயிற்சிக்கு ரூ.1750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான மாணவர்கள் செப்.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
 இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 080 - 26562307 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com