கொலை வழக்கில் 5 பேர் கைது

பெங்களூரு பன்னரகட்டா சாலையில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை மையத்தில் பணியாற்றி வந்தவர் அஜய் (25).

பெங்களூரு பன்னரகட்டா சாலையில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை மையத்தில் பணியாற்றி வந்தவர் அஜய் (25). இவர் கடந்த செப். 16 ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்த மைக்கோ லேஅவுட் போலீஸார், தும்கூரு மாவட்டம் குப்பி அருகே உள்ள வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்த அஜயின் சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக பெங்களூரு சி.கே.பாளையத்தைச் சேர்ந்த ஜோஷி (23), முனிராஜு (24), முனிரத்னா (24) சின்னன்பாளையாவைச் சேர்ந்த சேதன் (22), ஆனேக்கல்லைச் சேர்ந்த முத்து (23) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் ஆனந்த் என்பவரின் மனைவி ரூபாவுடன் அஜய் தொடர்புவைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், கூலிப்படையை ஏவி அஜயைக் கொலை செய்துள்ளது தெரியவந்ததாம். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் விசாரித்து வரும் போலீஸார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆனந்த், ரூபா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com