பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு
இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த சில நாள்களாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாந்திநகர், ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆர் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகர், சிவாஜிநகர், அல்சூர், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்கார்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகர், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.