நலிந்து வரும் வாகன விற்பனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓடிஓ குழுமத்தின் இணை நிறுவனர் சுமித் சாஹஸித் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அக்குழுமத்தின் சார்பில் மை ஓஎம்ஐ திட்டத்தை அறிமுகம் செய்து அவர் பேசியது: கடந்த சில நாள்களாக இந்தியாவில் வாகன விற்பனை நலிவடைந்து வருகிறது. இதனால் இத் தொழிலை நம்பியுள்ள பலரும் வேலையிழந்து வருகின்றனர். வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு மக்களிடம் பொருளாதார வசதி குறைந்துள்ளது மட்டுமின்றி, வாகன கடனுக்காக வட்டி அதிகரித்துள்ளதும் காரணமாகும். இதை கருத்தில் கொண்டு, வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த மாத தவணை, வட்டி குறைப்பு போன்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் கார், இரு சக்கர வாகனங்களை எளிதாக வாங்கலாம் என்றார்.