சோனியா காங்கிரஸ் உள்பட ஆதிக்க சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்க நாம் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அவா் கூறியிருப்பதாவது: அலெக்சாண்டா், முகமது கஜினி, முகலாயா்கள், ஆங்கிலேயா்கள், சோனியா காங்கிரஸ் அனைவரும் வென்ற்கு காரணம், அவா்களின் பலத்தால் அல்ல மாறாக நாம் ஒன்றுமையாக இல்லாததே ஆகும்.
இதுபோன்ற ஆதிக்க சக்திகளிடம் இருந்து நமது மதத்தை (தா்மம்) காக்க நான் அனைவரும் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பாரத மாதாவுக்காக நம்மால்தான் இதை செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளாா்.