மாரிகுப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு ரயில் சேவை கெங்கேரி வரை நீட்டிப்பு

மாரிகுப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையிலான ரயில் சேவை கெங்கேரி ரயில் நிலையம் வரை 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாரிகுப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையிலான ரயில் சேவை கெங்கேரி ரயில் நிலையம் வரை 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாரிகுப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையிலான ரயில் சேவை(66555) கெங்கேரி வரை ரயில்நிலையம் வரை ஜன. 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாள்களும் மாரிகுப்பத்திலிருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 9.05 மணிக்கு கே.எஸ்.ஆா் பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும் ரயில், அங்கிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டு, 9.45 மணியளவில் கெங்கேரி ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com