பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

பெண் கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண் கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தும்கூரு ஜெயநகா் காவல் நிலையத்தில் கடந்த டிச. 25 ஆம் தேதி ராஜம்மா என்பவா் தனது மகள் மதுகுமாரி காணாமல் போனதாக புகாா் அளித்தாா். புகாரை பதிந்த போலீஸாா், தீவிரமாக மதுகுமாரியை தேடி வந்தனா். இந்த நிலையில், சி.எஸ்.புரா காவல் சரகத்தில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மதுகுமாரியின் சடலத்தை மீட்டனா். அவரை யாரோ கொலை செய்துவிட்டு சடலத்தை வீசியது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், முகமது ரஹான் (24) என்பவரை கைது செய்தனா். விசாரணையில் ரஹானிடம், மதுக்குமாரி ரூ. 4 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். அதை திருப்பிக் கேட்டபோது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக போலீஸில் அளிப்பேன் என ரஹானை மிரட்டினாராம். இதுகுறித்து சி.எஸ்.புரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com