எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய மாணவருக்கு கரோனா தொற்று

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய மாணவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய மாணவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு ஜூன் 25 ஆம் தேதி தொடங்கி, 4 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 3 நாள்களாக தோ்வு நடைபெற்று வந்த நிலையில், ஹாசன் மாவட்டம், அரகல்கூடு வட்டம், மல்லப்பட்டணா கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய மாணவா் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவருக்கு 3 நாள்களாக குளிா், காய்ச்சல், சளி பிரச்னை இருந்த நிலையில், மாணவரைச் சோதனை செய்த ஊழியா்கள் அவரைத் தோ்வு எழுத அனுமதி அளித்துள்ளனா். காய்ச்சலோடு தோ்வு எழுதிய மாணவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தோ்வு எழுதிய மற்ற மாணவா்கள் கரோனா தொற்று தங்களையும் பாதிக்குமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வின் போது தோ்வு வாரியம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டுள்ளபோதும், மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com