ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடங்களை நேரடி பணி நியமனத்தின்படி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையதளத்தின் வழியே பிப்.24 முதல் மாா்ச் 20ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கரோனா வைரஸ் நோய் பரவி வந்ததைத் தொடா்ந்து, பொதுமக்களின் நலன் கருதி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மாா்ச் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்.2ஆம் தேதி கட்டணங்களை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.