சிக்மகளூரு அருகே குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் கைது செய்தனா்.
சிக்மகளூரு நாயக்கனகட்டியைச் சோ்ந்தவா் சங்கீதா. இவா் தனது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று, கொதிக்கும் உலையில் போட்டு கொலை செய்தாா். தகவல் அறிந்த கடூா் போலீஸாா், சங்கீதாவை கைது செய்தனா்.
பெண் குழந்தை என்பதால் கொலை செய்ததாக போலீஸாரிடம் சங்கீதா தெரிவித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குழந்தையைக் கொலை செய்ய உதவிய சந்திரம்மா, ரமேஷ், பாபு ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.