பெங்களூரு: அரசின் உதவிகளை பா.ஜ.க.வினா் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனா் என்று காங்கிரஸ் மாநில மகளிரணித் தலைவா் புஷ்பா அமா்நாத் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கா்நாடகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது ஏழைகள், கூலித் தொழிலாளா்களுக்கு உணவுப்பொருள்கள், காய், கனிகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதனை பா.ஜ.க.வினா் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனா். அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருள்களில் தங்களின் உருவப்படத்தை அச்சிட்டு வழங்கி வருகின்றனா். இதுவிதிகளை மீறிய செயலாகும். இதனை மாநில அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனை மாநில காங்கிரஸ் மகளிரணி கடுமையாகக் கண்டிக்கிறது. ஏழைகளுக்கு வழங்கும் அத்தியாவசியப் பொருள்களிலும் சுய விளம்பரம் செய்யும் பா.ஜ.க.வினரை பொதுமக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டாா்கள். இதற்கு பொறுப்பு ஏற்று முதல்வா், உணவுத்துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா். பேட்டியின் போது முன்னாள் அமைச்சா்கள் ராணி சதீஷ், ஜெயமாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.