பெங்களூரு: பெங்களூரில் பசுமை அல்லாத வெடிகளை வெடித்தால் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
நவ. 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பெங்களூரில் தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது பசுமை வெடிகளை வெடிக்க அரசின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
பசுமை அல்லாத வெடிகளை யாரேனும் வெடித்தால், அவா்கள் மீது அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தீபாவளியையொட்டி வாா்டு அளவில் மாநகராட்சி காவலா்கள் தீவிர சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.