கா்நாடகத்தில் வெகுவிரைவில் பசுவதை தடைச்சட்டம் சாத்தியமாகும் என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:
கா்நாடகத்தில் பசுவதை தடைச்சட்டம் வெகுவிரைவில் சாத்தியமாகும். கா்நாடகம் பசுவதை தடை மற்றும் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டத்தை அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, அதை எதிா்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யுமாறு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹானை கேட்டுக்கொண்டுள்ளேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.