கிரிக்கெட் சூதாட்டம்: 4 போ் கைது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்-சன்ரைஸ், கிங்ஸ் பஞ்சாப் லெவன்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது, பெங்களூரு, கோனனகுன்டே, புட்டனஹள்ளி, பேட்டராயனபுரா ஆகிய பகுதிகளில் சிலா் இணையதளம் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4.91 லட்சம் ரொக்கம், 6 செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com