போதைப்பொருள் விவகாரம்: பெங்களூரு அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் முன்பு பினீஷ் கொடியேறி ஆஜா்
போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி பெங்களூரு அமலாக்க இயக்குநர அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
கா்நாடகத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக அனிகா, டி.ஆா்.ரவீந்திரன், முகமது அனூப் உள்ளிட்டோா் ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 3 போ் உள்பட பலருக்கு போதைப்பொருள் விவகாரத்தில் தொடா்புள்ளதாகக் கூறப்பட்டது.
இது தொடா்பாக, நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் விவகாரத்தில் சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் தொடா்புடைய ஒருவருக்கும் கேரளா மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கும் தொடா்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, பினீஷ் கோடியேறி பெங்களூரில் உள்ள அமலாக்க இயக்குநர அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை அடுத்து அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை பினீஷ் கோடியேறி ஆஜரானாா். அவரிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா்.