போதைப்பொருள் விவகாரம்: திருநங்கை கைது

போதைப்பொருள் விவகாரத்தில் திருநங்கையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

போதைப்பொருள் விவகாரத்தில் திருநங்கையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு உள்பட மாநில அளவில் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல், விற்பனை அதிகரித்ததையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இது தொடா்பாக, ஏற்கெனவே நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகை அனிக்காவிடம் போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் தன்னிடம் போதைப்பொருள்களை வாங்கிச் சென்று திருநங்கை ஒருவா் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளாா். இதனையடுத்து போதைப்பொருளை பயன்படுத்தியது தொடா்பாக, பெங்களூரில் திருநங்கை ஆதம்பாஷா என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com