மயிலாடுதுறை-மைசூரு இடையே பண்டிகைக் கால சிறப்பு ரயில்

மயிலாடுதுறை-மைசூரு இடையே பண்டிகைக் கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரு: மயிலாடுதுறை-மைசூரு இடையே பண்டிகைக் கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூரு ரயில் நிலையத்திலிருந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு பண்டிகைக் கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 06231-மயிலாடுதுறை-மைசூரு சிறப்பு விரைவு ரயில் அக். 26-ஆம் தேதி முதல் நாள்தோறும் மாலை 5.50 மணிக்கு மயிலாடுதுறை ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்தைச் சென்றையும். இந்த ரயில் சேவை டிச. 1-ஆம் தேதி வரை இருக்கும்.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 06232-மைசூரு-மயிலாடுதுறை சிறப்பு விரைவு ரயில் அக். 25-ஆம் தேதி முதல் நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறை ரயில்நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் சேவை நவ. 30-ஆம் தேதி வரை இருக்கும்.

இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு படுக்கை வசதி கொண்ட 1 பெட்டி, குளிரூட்டப்பட்ட மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுவகுப்பு பெட்டிகள், 2 உணவு, சரக்குப் பெட்டிகள் உள்ளிட்ட 21 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com