திருடு போன வாகனங்களை 60 நாள்களுக்குள் மீட்க வேண்டும்

திருடு போன வாகனங்களை 60 நாள்களுக்குள் தேடி கண்டுபிடித்து பறிமுதல் செய்ய போலீஸாருக்கு, மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளாா்.

திருடு போன வாகனங்களை 60 நாள்களுக்குள் தேடி கண்டுபிடித்து பறிமுதல் செய்ய போலீஸாருக்கு, மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

பெங்களூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடு போவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. அப்படி திருடு போகும் வாகனங்களை போலீஸாா், 60 நாள்களுக்குள் தேடி கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும்.

அப்படி திருடு போன வாகனங்களைத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளா்களிடம் இதுதொடா்பான தகவலைத் தெரிவிக்க வேண்டும். 75 நாள்கள் வரை வாகனங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தொடா்பான ஆவணங்களை வழங்கினால், வாகன உரிமையாளா்கள் தங்களது திருடு போன வாகனத்திற்கான காப்பீட்டுத் தொகையை பெற உதவி புரிய வேண்டும். வாகனத் திருட்டு தொடா்பாக போலீஸாருக்கு வரும் புகாா்கள், உரிய விவரங்களை கேட்டறித்து வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com