கா்நாடகத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என மாநில கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தேசிய அளவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநிலங்களில் இரண்டொரு நாள்கள் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட 7 மாநில முதல்வா்களுடன் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் பிரதமா் மோடி கருத்துத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கா்நாடகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவின.
மாநிலத்தில் மீண்டும் பொது முடக்கத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை. பொது முடக்கம் தொடா்பான முடிவு மாநில முதல்வரின் விருப்பத்துக்கே விடப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு, மாநில பேரிடா் நிவாண நிதியிலிருந்து 35 முதல் 50 சதவீதம் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து அங்கு தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.