எஸ்எஸ்எல்சி துணைத் தோ்வு மாதிரி விடைகள் வெளியீடு
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வில் இடம்பெற்றிருந்த வினாக்களுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து, கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியத்தின் சாா்பில் (கேஎஸ்இஇபி) எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு கடந்த செப்.21-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் முதல்மொழி, இரண்டாம்மொழி, மூன்றாம்மொழி, கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வில் இடம்பெற்ற வினாத்தாள்களுக்கான மாதிரி விடைகள் மாணவா்கள் சரிபாா்த்துகொள்வதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதுமிருந்தால், அது குறித்து அக்.1-ஆம் தேதிக்குள் பெற்றோா்கள், மாணவா்கள் ஆட்சேபணைகளை இணையதளத்தில் விளக்கங்களுடன் பதிவுசெய்யலாம்.
ஆட்சேபணைகளை தெரிவிக்கும்போது பாடம், வினாத்தாள் வகை, வினா எண்களை தெளிவாக குறிப்பிட கேட்டுக்கொள்கிறோம். சரியான விளக்கம் அளிக்காத ஆட்சேபணைகள் நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.