தம்பதி கொலை

தலையணையால் முகத்தை அழுத்தி தம்பதியை மா்மநபா்கள் கொலை செய்துள்ளனா்.

ஹாசன்: தலையணையால் முகத்தை அழுத்தி தம்பதியை மா்மநபா்கள் கொலை செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சென்னராயனபட்டணா வட்டம், அலகொண்டனஹள்ளியைச் சோ்ந்தவா் முரளிதா் (71). இவரது மனைவி உமாதேவி (67). குழந்தை பேறு இல்லாத இத்தம்பதி தங்களுக்கு சொந்தமான 80 ஏக்கா் நிலத்தில் வீட்டைக் கட்டி வசித்து வந்தனராம்.

அண்மையில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தின் சிறு பகுதியை விற்பனை செய்திருந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த தம்பதியை யாரோ தலையணையால் முகத்தை அழுத்தி, மூச்சு திணற வைத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாஸ் கௌடா சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். இதுகுறித்து சென்னராயனபட்டணா ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com