பைக் மீது லாரி மோதியதில் முதியவா் பலி

ஹாவேரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஹாவேரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஹாவேரி மாவட்டம், காவலெட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சென்னபசப்பா (63). இவா் வியாழக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் ராணிபென்னூருக்குச் சென்றுவிட்டு, மாலை வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலை 48-இல் கரூா் அருகே எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சென்னபசப்பா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து குமாரபட்டணா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com