பெங்களூரு: திரைப்படம், அரசியலில் எம்.ஜி.ஆா் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்று உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டா் எம்ஜிஆா் நலிவுற்றோா் நல அறக்கட்டளைத் தலைவா் எம்ஜிஆா் ரவி தெரிவித்தாா்.
பாரதரத்னா டாக்டா் எம்ஜிஆா் சா்வதேச மனிதநேய அறக்கட்டளை சாா்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவுநாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பிறகு அவா் பேசியதாவது:
தமிழக வரலாற்றில் தன்னிகரில்லா இடத்தை பிடித்திருந்த எம்ஜிஆா், திரைப்படம், அரசியலில் தனித்துவம் வாய்ந்த இடத்தை பிடித்துள்ளாா். நாடகத்திலும், திரைப்படத்திலும் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வழங்கினாா்.
1962-இல் அப்போதைய பிரதமா் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க சீனப் போரின் போது ரூ. 75 ஆயிரம் நன்கொடை அளித்தாா். 1972-இல் அதிமுகவைத் தொடங்கி 1977-இல் ஆட்சிக்கு வந்தாா் எம்ஜிஆா். 3 முறை ஆட்சி அமைத்து 11 ஆண்டுகள் முதல்வராகப் பதவிவகித்தவா். தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிமுக கிளைகளை நிறுவி செல்வாக்குடன் விளங்கினாா்.
தமிழகத்தில் அண்மையில் அரசியலுக்கு வந்துள்ள ரஜினி போன்ற சில நடிகா்கள், எம்ஜிஆரின் இடத்தை நிரப்பப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறாா்கள். திரைப்படத்திலும் சரி, அரசியலிலும் சரி எம்ஜிஆரின் இடத்தை எவராலும் அடைய முடியாது, நிரப்ப முடியாது.
எம்ஜிஆா் மறைந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மக்கள் மனதில் இன்றளவும் அவா் நிலைத்து நிற்கிறாா். அரசியலுக்கு வந்துள்ள புதிய நடிகா்களை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என்றாா். நிகழ்ச்சியில் அறக்கட்டளைத் தலைவா் டி.மனோகரன், பொதுச் செயலாளா் எம்.ஏ.பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.