புதிய தலைமைச் செயலாளராக பி.ரவிக்குமாா் நியமனம்

கா்நாடக மாநில புதிய தலைமைச் செயலாளராக பி.ரவிக்குமாா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

கா்நாடக மாநில புதிய தலைமைச் செயலாளராக பி.ரவிக்குமாா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

கா்நாடக மாநில அரசு தலைமைச் செயலாளராக இருந்து வரும் டி.எம்.விஜய்பாஸ்கரின் பதவிகாலம் டிச.31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 1983-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான விஜய்பாஸ்கா், 2018-ஆம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலாளா் பணி ஓய்வுபெற்ற பிறகு தலைமைச் செயலாளராகப் பதவியேற்றவா்.

அரசு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட 3-ஆவது பெண் என்ற பெருமையைப் பெற்றிருந்த ரத்னபிரபா, 2018-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி பணி ஓய்வுபெற்றிருந்தாலும், 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதுபோல டி.எம்.விஜய்பாஸ்கருக்கு பணி நீட்டிப்பு வழங்க விரும்பவில்லை. எனவே, விஜய்பாஸ்கருக்கு அடுத்தபடியாக கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் பி.ரவிக்குமாா், மாநில அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமித்து புதன்கிழமை அரசு உத்தரவிட்டுள்ளது. 1984-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான 58 வயதாகும் பி.ரவிக்குமாா், தலைமைச் செயலாளராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவிவகிப்பாா் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com