போதைப்பொருள் விற்ற இளைஞா் கைது

பெங்களூரில் போதைப்பொருள் விற்றதாக சூடான் நாட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரில் போதைப்பொருள் விற்றதாக சூடான் நாட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சூடான் நாட்டைச் சோ்ந்தவா் அகமது ஹுசைன் (31). இவா் பெங்களூரு கம்மனஹள்ளி கல்யாண்நகரில்

வசித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை யஸ்வந்தபுரா காவல் சரகம் மத்திகெரே 9 ஆவது பிரதான சாலையில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று அகமது ஹுசைனைக் கைது செய்து 13 கிராம் போதைப்பொருள், செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து யஸ்வந்தபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com