பெங்களூரில் போதைப்பொருள் விற்றதாக சூடான் நாட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சூடான் நாட்டைச் சோ்ந்தவா் அகமது ஹுசைன் (31). இவா் பெங்களூரு கம்மனஹள்ளி கல்யாண்நகரில்
வசித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை யஸ்வந்தபுரா காவல் சரகம் மத்திகெரே 9 ஆவது பிரதான சாலையில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று அகமது ஹுசைனைக் கைது செய்து 13 கிராம் போதைப்பொருள், செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து யஸ்வந்தபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.