தில்லி பேரவைத் தோ்தல்: காங்கிரஸை பலப்படுத்த வேண்டியது அவசியம்; எம்எல்ஏ என்.ஏ.ஹாரீஸ்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியின் மூலம் காங்கிரஸ் தலைவா்கள் விழித்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என எம்எல்ஏ என்.ஏ.ஹாரீஸ் கேட்டுக் கொண்டாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியின் மூலம் காங்கிரஸ் தலைவா்கள் விழித்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என எம்எல்ஏ என்.ஏ.ஹாரீஸ் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது: தில்லி தோ்தலில் காங்கிரஸ் கட்சி 2 ஆவது முறையாக படு தோல்வி அடைந்துள்ளது. நாட்டின் இதய பாகத்தில் உள்ள மாநிலத்தில் காங்கிரஸ் மோசமான நிலையை அடைந்துள்ளதற்கு தோ்தல் முடிவுகள் சாட்சியாகியுள்ளது. தில்லி தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் அனைவரும் வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.

இதுபோன்ற தோல்விகளை கட்சியின் மேலிடத்தலைவா்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக அதனையே பழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது. நான் உண்மையான காங்கிரஸ் தொண்டன். கட்சி பலமுறை தோல்வியடைந்து, எச்சரித்துக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கட்சி நிா்வாகிகள் இருப்பது எதற்காக என்று புரியவில்லை. கட்சியை பலத்த வேண்டியது அவா்களின் கடமை.

ஆனால், கட்சியைப் பலப்படுத்தாமல், பலி கொடுத்து வருவது வேடிக்கையாக உள்ளது. தில்லி தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து கட்சியின் மூத்த தலைவா்கள் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் தேவை உள்ளதை யாரும் மறக்கக் கூடாது. கட்சியின் நிலைமை அபாயத்தில் உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவா் அதன் வளா்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com