பிப்.17 முதல் விதான சௌதா பகுதியில் 144 தடை உத்தரவு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறவதையொட்டி, பிப். 17-ஆம் தேதி முதல் விதான சௌதாவில் 2 கி.மீ சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறவதையொட்டி, பிப். 17-ஆம் தேதி முதல் விதான சௌதாவில் 2 கி.மீ சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் பிப். 17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதையொட்டி பிப். 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப். 20-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான சௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com