சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறவதையொட்டி, பிப். 17-ஆம் தேதி முதல் விதான சௌதாவில் 2 கி.மீ சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் பிப். 17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதையொட்டி பிப். 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப். 20-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான சௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.