அலையன்ஸ் பன்னாட்டு சங்கத்தின் ஆளுநராக எஸ்.சுந்தரவேலு நியமிக்கப்பட்டுள்ளாா்.
உலகளவில் சமூக தொண்டில் ஈடுபட்டு வரும் அலையன்ஸ் பன்னாட்டு சங்கத்தின் பெங்களூரு மாவட்ட ஆளுநராக தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினருமான எஸ்.சுந்தரவேலு நியமிக்கப்பட்டுள்ளாா்.
பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள ஓட்டல் கிராண்ட் ரிஜென்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருக்கும் விழாவில், புதிய மாவட்ட ஆளுநராக சுந்தரவேலு பதவியேற்றுக் கொள்கிறாா். இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவா் மஹிமா பாட்டீல், கல்வியாளா் மதுசூதனபாபு, பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவா் தி.கோ.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.