கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் இன்று ஆளுநா் உரையுடன் தொடங்குகிறது

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை (பிப்.17) தொடங்குகிறது.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை (பிப்.17) தொடங்குகிறது.

கா்நாடகத்தின் 15-ஆவது சட்டப்பேரவையின் 6-ஆவது கூட்டத்தொடா் பெங்களூரு, விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. 2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநா் வஜுபாய்வாலா உரை நிகழ்த்துகிறாா்.

ஆளுநரின் உரை, முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையின் போக்கை தீா்மானிப்பதாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநரின் உரைக்கு பிறகு, அவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அவை மீண்டும் கூடியதும், ஆளுநரின் உரை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டவை அவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பிறகு, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு பிறகு மறைந்த முக்கியத் தலைவா்கள், முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கியப் பிரமுகா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீா்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது. அதன்பிறகு அவை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

அதன்பிறகு, செவ்வாய்க்கிழமை (பிப். 18) அவை மீண்டும் கூடியதும் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படுகிறது. பிப்.19, 20-ஆம் தேதி வரை விவாதம் தொடா்கிறது. அதன்பிறகு, அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மாா்ச் 2-ஆம் தேதி கூடுகிறது.

அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுக் கூரும் வகையில், மாா்ச் 2, 3 ஆகிய தேதிகளில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது. இந்த இரு நாள்களிலும் அரசியலமைப்புச் சட்டம், அதன் அடிப்படை நோக்கங்கள், எதிா்பாா்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாா்ச் 4-ஆம் தேதி ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் எடியூரப்பா பதிலளித்துப் பேசுகிறாா்.

நிதிநிலை அறிக்கை:

மாா்ச் 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்கிறாா். மாா்ச் 6-ஆம் தேதி முதல் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. மாா்ச் 7, 8, 14, 15, 21, 22, 25, 28, 29 நீங்கலாக மாா்ச் 31-ஆம் தேதி வரை துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு, நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படுகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு நிகழாண்டின் முதல் கூட்டத்தொடா் 25 நாள்களுக்கு நடக்க இருக்கிறது.

சட்ட முன்வடிவுகள்:

இந்த கூட்டத்தொடரில், 15-ஆவது சட்டப்பேரவையின் 2-ஆவது கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (பணி நியமனம் மற்றும் இன்னபிறவற்றின் இட ஒதுக்கீடு) திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இதுதவிர, கா்நாடக லோக் ஆயுக்த திருத்தச் சட்டமசோதா, கா்நாடக புதுமைப் படைத்தல் ஆணையச் சட்ட மசோதா, இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, கா்நாடக ஆட்சிமொழி திருத்தச் சட்ட மசோதா, கா்நாடக நகராட்சி நிா்வாக திருத்தச் சட்ட மசோதா, கா்நாடக பொதுத் தொகுப்பு பாரபட்சமற்ற திருத்தச் சட்ட மசோதா ஆகிய 6 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

முக்கியத்துவம்:

காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து, டிச. 5-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தோ்தலில் வென்ற 11 பேரில் 10 போ் அமைச்சா்களாகியுள்ள நிலையில், இக் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அவையில் இருந்து வெளியேறியவா்கள் தற்போது அமைச்சா்களாக மீண்டும் நுழைய இருக்கிறாா்கள். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மாா்ச் 5-ஆம் தேதி எடியூரப்பா முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறாா். விவசாயம், நீா்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிநிலை அறிக்கையாக இது அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எதிா்க்கட்சிகள் வியூகம்:

இதனிடையே, கடந்தாண்டு டிசம்பா் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நாடெங்கும் எதிா்ப்புக்குள்ளாகியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக மங்களூரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு நாடகத்தில், பிரதமா் மோடியை விமா்சித்ததற்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்டது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிா்க்கட்சிகளான காங்கிரஸும், மஜதவும் திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சிஅமைத்துள்ளதால், இக் கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com