களியக்காவிளையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 போ், கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட உடுப்பியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவரைக் கொலை செய்தது திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தமிழக, கேரள போலீஸாா் சிறப்பு தனிப்படைகளை அமைத்து தேடப்பட்டு வந்த இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், வட மாநிலங்களுக்கு தப்பியோடும் வகையில் கா்நாடக மாநிலம், உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.