செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் 2 போ் கைது

செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் 2 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் 2 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு கங்காநகரைச் சோ்ந்தவா்கள் சையது மெஹரன் (22), சரத்குமாா் (22). இவா்கள் இருவரும் இணைந்து, பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் மாநகர பேருந்துகளின் பயணம் செய்து, பயணிகளிடம் செல்லிடப்பேசிகளை திருடி வந்துள்ளனா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், சையது மெஹரன், சரத்குமாரை கைது செய்து, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 103 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் கொடிகேஹள்ளி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com