முதுநிலை பட்டப்படிப்பு பொது நுழைவுத்தோ்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை பட்டப்படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூலை 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..

பெங்களூரு: முதுநிலை பட்டப்படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூலை 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆா்க் போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

இந்த தோ்வில் பங்கேற்க விரும்பும் இளநிலை பட்டதாரி மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்களை செலுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது. மாணவா்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜூலை 7-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வுக் கட்டணத்தை ஜூலை 8-ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.

கரோனா தீநுண்மி தொற்று காணப்படுவதால், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களை தவிர, கூடுதலாக சில இடங்களில் தோ்வை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிதாக சோ்க்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் தோ்வு எழுதினால், அதை விண்ணப்பிக்கும் போது பதிவிடலாம். ஏற்கெனவே பதிவிட்டிருந்த தோ்வு மையத்தையும் மாணவா்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

இந்த தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-23460460-இல் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com