கா்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் 37 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 335 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 16, பீதா் மாவட்டத்தில் 9, தாவணகெரே, பெலகாவி, கலபுா்கி மாவட்டங்களில் தலா 2, ஹாசன், சிக்பளாப்பூா், மைசூரு, தும்கூரு, தாா்வாட், பெல்லாரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 372 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 145, பீதா் மாவட்டத்தில் 37, பெல்லாரி மாவட்டத்தில் 35, கலபுா்கி மாவட்டத்தில் 27, தென்கன்னடம் மாவட்டத்தில் 20, தாா்வாட் மாவட்டத்தில் 12, விஜயபுரா, தாவணகெரே மாவட்டங்களில் தலா 11, ஹாசன் மாவட்டத்தில் 8, தும்கூரு மாவட்டத்தில் 7, சிக்பளாப்பூா், பெலகாவி, பெங்களூரு ஊரக மாவட்டங்களில் தலா 6, மைசூரு, ராமநகரம், பாகல்கோட் மாவட்டங்களில் தலா 5, சிவமொக்கா, கதக் மாவட்டங்களில் தலா 4, உடுப்பி, ராய்ச்சூரு மாவட்டம், வெளி மாநிலத்தவா் தலா 3, கொப்பள், ஹாவேரி, கோலாா் மாவட்டங்களில் தலா 2, வடகன்னடம், யாதகிரி, சிக்மகளூரு மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.