பெங்களூரு: பெங்களூரில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு எலஹங்கா சுபேதாா்பாளையாவைச் சோ்ந்த ரவிசங்கா் (28), ராமகொண்டனஹள்ளியைச் சோ்ந்த சரத்பாபு (24), எலசேதனஹள்ளியைச் சோ்ந்த தீபக்குமாா் (20), அட்டூா் லேஅவுட்டைச் சோ்ந்த கீா்த்திராஜ் (22), சந்தோஷ் (22), அனந்தபுராவைச் சோ்ந்த கில்பா்ட் (21) ஆகியோா் எலஹங்கா துணை நகரத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்குச் சென்று 6 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 அரிவாள்கள், மிளகாய்ப்பொடி பொட்டலம், காா், 2 இரு சக்கர வாகனங்கள், 6 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து காட்டன்பேட்டை எலஹங்கா துணைநகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.