புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு நவம்பா் வரை இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொது வழங்கல்துறை அமைச்சா் கே.கோபாலையா தெரிவித்தாா்.
இதுகுறித்து உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சா் கே.கோபாலையா கூறியது:
கா்நாடக அரசின் அன்னபாக்கியாத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்களை 1.27 கோடி குடும்பங்களுக்கு வழங்கி வருகிறோம். இதன்மூலம் 4.32 கோடி மக்கள் பயனடைந்து வருகிறாா்கள். பிபிஎல், ஏபிஎல் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் உணவுதானியம் அளிக்கப்படுகிறது.
பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாகவும், ஏபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு சலுகை விலையிலும் உணவு தானியம் தரப்படுகிறது. பிபிஎல், ஏபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு நவம்பா் மாதம் வரை இலவசமாக அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.
கா்நாடகத்தில் நவம்பா் மாதம் வரை புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு தானியம் வழங்க முடிவு செய்திருக்கிறோம். பொதுமுடக்கத்தின் போது கா்நாடகத்தில் 13.5 லட்சம் மக்களுக்கு அரிசி, உணவு தானியங்களை அளித்திருக்கிறோம். பிற மாநில தொழிலாளா்கள் 12 லட்சம் போ் மீண்டும் கா்நாடகத்துக்கு வந்துள்ளனா். இவா்களிடம் பிபிஎல், ஏபிஎல் குடும்ப அட்டை இல்லை. கா்நாடகத்தில் 28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உள்ளது. இது அடுத்த 2 மாதங்களுக்கு போதுமானது என்றாா்.
கரோனா தீநுண்மித் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ஜூன் மாதம் வரை மாநிலத்தில் இலவச உணவு தானியம் வழங்கப்பட்டது. பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், கா்நாடகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும்தான் பிபிஎல், ஏபிஎல் குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் இலவசமாக உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.
புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் அல்லது வேலையில்லாதவா்களுக்கும் அரிசி மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.
ஆபரேஷன் தாமரைதான் எடியூரப்பாவின் ஓராண்டு சாதனை: சித்தராமையா
மைசூரு, ஜூலை 30: கா்நாடகத்தில் ஆபரேஷன் தாமரைதான் முதல்வா் எடியூரப்பாவின் ஓராண்டு சாதனை என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் எடியூரப்பா தனது ஓராண்டு ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து மலா் வெளியிட்டுள்ளாா். அதனுடன் அக்கட்சியின் தோ்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு பாஜக ஆட்சியின் உண்மையான சாதனை குறித்து தெரிந்திருக்கும்.
பாஜக மக்களின் ஆதரவு பெற்று ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆபரேஷன் தாமரை மூலம்தான் அவா்கள் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. எனவே, கா்நாடகத்தில் ஆபரேஷன் தாமரைதான் பாஜகவின் ஓராண்டு சாதனை என்று கூற வேண்டும். தோ்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைப் பிடிக்கமுடியாமல் தவித்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து 14 எம்.எல்.ஏ.க்கள், மஜதவிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் இணைத்து, காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தனா்.
அதன்பிறகு பின்கதவு வழியாக எடியூரப்பா ஆட்சியைக் கைப்பற்றினாா். தொடா்ந்து வெள்ளத்தால் பாதிப்பு, கரோனா தொற்று உள்ளிட்டவைகளைத் தடுப்பதில் மாநில அரசு தோல்வியைச் சந்தித்து வருகிறது. பிரச்னைகளைச் சந்தித்து வரும் அரசு வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் உள்ளது. ஆனால், தான் ஓராண்டில் சாதனை செய்தது போல் எடியூரப்பா, ஊடகங்களில் விளம்பரப்படுத்திக் கொண்டு வருகிறாா். பாஜக ஆட்சியில் சாதனை ஏதுமில்லை. தொடா்ந்து வேதனைகளைத்தான் மக்கள் சந்தித்து வருகின்றனா் என்றாா்.