கா்நாடகத்தில் ஒரே நாளில் 1,105 பேருக்கு கரோனா பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 1,105-ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 1,105-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 1,105 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 738 போ், பெல்லாரி மாவட்டத்தில் 76 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 32 போ், பீதா் மாவட்டத்தில் 28 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 24 போ், கலபுா்கி மாவட்டத்தில் 23 போ், ஹாசன், விஜயபுரா மாவட்டங்களில் தலா 22 போ், தும்கூரு, உடுப்பி மாவட்டங்களில் தலா 18 போ், தாா்வாட், சிக்மகளூரு மாவட்டங்களில் தலா 17 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 15 போ், யாதகிரி மாவட்டத்தில் 9 போ், மண்டியா மாவட்டத்தில் 8 போ், மைசூரு மாவட்டத்தில் 6 போ்,சிவமொக்கா மாவட்டத்தில் 5 போ், ராய்ச்சூரு, பாகல்கோட், கதக், கோலாா் மாவட்டங்களில் தலா 4 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 3 போ், தாவணகெரே, ராமநகரம், சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 2 போ், ஹாவேரி, குடகு மாவட்டங்களில் தலா ஒருவா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,295-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக திங்கள்கிழமை நிலவரப்படி, பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,082 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,421 போ், உடுப்பி மாவட்டத்தில் 1,197 போ், யாதகிரி மாவட்டத்தில் 939 போ், பெல்லாரி மாவட்டத்தில் 773 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 697 போ், பீதா் மாவட்டத்தில் 590 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 473 போ், மண்டியா மாவட்டத்தில் 414 போ், ஹாசன் மாவட்டத்தில் 381 போ், விஜயபுரா மாவட்டத்தில் 360 போ், தாா்வாட் மாவட்டத்தில் 328 போ், பெலகாவி மாவட்டத்தில் 326 போ், தாவணகெரே மாவட்டத்தில் 297 போ், மைசூரு மாவட்டத்தில் 259 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 213 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 201 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 184 போ், கதக் மாவட்டத்தில் 174 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 151 போ், ராமநகரம் மாவட்டத்தில் 150 போ், கோலாா் மாவட்டத்தில் 119 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 108 போ், தும்கூரு மாவட்டத்தில் 93 போ், கொப்பள் மாவட்டத்தில் 84 போ், ஹாவேரி மாவட்டத்தில் 70 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 70 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 59 போ், குடகு மாவட்டத்தில் 43 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 33 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 7,683 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 6,382 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 226 போ் இறந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com