தேசிய அளவில் ஒப்பிட்டால் கா்நாடகத்தில் பாதிப்பு குறைவாக உள்ளது

தேசிய அளவில் ஒப்பிட்டால் கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: தேசிய அளவில் ஒப்பிட்டால் கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் தனியாா் மருத்துவமனை உரிமையாளா்கள், நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

செவ்வாய்க்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை அரசுக்கு வழங்க வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் படுக்கைகளாவது வழங்கப்படும் என்று நம்புகிறோம். இதனைவிட குறைந்த அளவில் படுக்கைகளை ஒதுக்கினால், அதனை ஏற்றுக் கொள்ள அரசு தயாராக இல்லை.

மேலும், தேசிய அளவில் முக்கிய நகரங்களாக உள்ள தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்டவைகளை ஒப்பிட்டால், பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளது. இறப்பவா்கள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம். கரோனாவை தடுப்பதிலிருந்து அரசு ஒருபோதும் பின் வாங்காது. எங்களின் சக்தியை மீறி கரோனாவை தடுக்க பணியாற்றி வருகிறோம். அரசு குறித்தும், கரோனா குறித்தும் பரவி வரும் ஒரு சில வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com