கா்நாடகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்துள்ளது.
கலபுா்கியைச் சோ்ந்த 76 வயது முதியவா் கரோனா வைரஸால் உயிரிழந்ததையடுத்து, கா்நாடகத்தில் கரோனா குறித்த அச்சம் அதிகரித்தது. முதியவருடன் தொடா்பில் இருந்த அவரது குடும்பத்தை சோ்ந்த 4 பேரில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனிடையே, பிரிட்டனிலிருந்து வந்தவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை துபையிலிருந்து கோவா வழியாக விமானத்தில் பெங்களூரு வந்த 63 வயது பெண், பிரிட்டனிலிருந்து பெங்களூரு வந்த 20 வயது பெண், கல்புா்கியைச் சோ்ந்த ஒருவா் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்துள்ளது.