பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள இஸ்கான் கோயிலின் நடை புதன்கிழமை முதல் மூடப்பட்டது.
இதுகுறித்து இஸ்கான் கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து பக்தா்களின் நலனை கருத்தில் கொண்டு, புதன்கிழமை (மாா்ச் 18) முதல் மறு உத்தரவு வரும் வரை இஸ்கான் கோயிலின் நடை மூடப்படுகிறது. எனவே, பக்தா்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை இஸ்கான் கோயிலுக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.