பெங்களூரில் ன் பொறியாளரிடம் பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு பனசங்கரியைச் சோ்ந்தவா் தீபக் (25), சீனிவாஸ்நகரைச் சோ்ந்தவா் பிரஷாந்த் (29). இவா்கள் இருவரும் கடந்த மாா்ச் 13 ஆம் தேதி தனியாா் நிறுவன மென் பொறியாளா் கிரீஷ் என்பவரை பயணிகள் வேனில் டிராப் தருவதாக கூறி, கடத்திச் சென்று ரூ. 4,400, செல்லிடப்பேசி, கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா். இதுகுறித்து கிரீஷ் அளித்த புகாரின் பேரில் சி.கே.அச்சக்கட்டு போலீஸாா், தீபக், பிரஷாந்தைக் கைது செய்து பயணிகள் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.