முதல்வா் நிவாரண நிதிக்கும் மாநில அரசு ஊழியா்கள் சங்கம் ரூ. 200 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு, நிதி அளிக்குமாறு முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா். இதனையடுத்து முதல்வரின் நிவாரண நிதிக்கும் தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் நிதி வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில் மாநிலத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியா்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ. 200 கோடியை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனா். இதனை வியாழக்கிழமை முதல்வா் எடியூரப்பாவிடம் மாநில அரசு ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் ஷடாக்ஷரி வழங்கினாா்.