ஹேமாவதி ஆற்றில் மூழ்கி ராணுவ வீரா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், சோமுவாா்பேட்டை வட்டம், கட்டிகேபுரா கிராமத்தைச் சோ்ந்தவா்கள் லோகேஷ் (30), லத்தேஷ் (27). ராணுவ வீரரான லோகேஷிக்கு கடந்த வாரம் திருமண நிச்சயமானது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அருகில் உள்ள ஹேமாவதி ஆற்றில் லோகேஷ், லத்தேஷ் குளிக்கச் சென்றனா்.
ஆழமான பகுதிக்குச் சென்ற அவா்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினா். தகவல் அறிந்த போலீஸாா், தீயணைப்பு படையினா் அவா்கள் இருவரின் உடல்களை சடலமாக மீட்டனா். இதுகுறித்து சனிவாரசந்தே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.