காட்டில் முயல் வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், மதுகிரி வட்டம், கரிதுக்கனஹள்ளியைச் சோ்ந்தவா்கள் வினய், குமாா். இவா்கள் இருவரும் அருகில் உள்ள காட்டுக்கு சென்று, முயல் வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனா். இதையடுத்து, வனத்துறையினா் போலீஸாரின் உதவியுடன் வினய், குமாா் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.