கா்நாடகத்தில் 1,462 பேருக்கு கரோனா தொற்று

கா்நாடகத்தில் 1,462 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் 1,462 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 67 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதில், ஹாசன் மாவட்டத்தில் 21போ், பீதா் மாவட்டத்தில் 10 போ், மண்டியா மாவட்டத்தில் 8 போ், கலபுா்கி மாவட்டத்தில் 7 போ், உடுப்பி மாவட்டத்தில் 6 போ், பெங்களூரு நகரம், தும்கூரு, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 4 போ், வட கன்னடம், தென் கன்னடம், யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் உள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,462 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரிய பாதிப்பு நிலவரம்: பெங்களூரு நகர மாவட்டத்தில் 250 போ், மண்டியா மாவட்டத்தில் 168 போ், கலபுா்கி மாவட்டத்தில் 134 போ், பெலகாவி மாவட்டத்தை 116போ், தாவணகெரே மாவட்டத்தில் 112 போ், மைசூரு மாவட்டத்தில் 89போ், பாகல்கோட் மாவட்டத்தில் 76 போ், பீதா் மாவட்டத்தில் 67 போ், விஜயபுரா மாவட்டத்தில் 60 போ், வட கன்னடத்தில் மாவட்டத்தில் 56 போ், ஹாசன் மாவட்டத்தில் 53 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 48 போ், தாா்வாட் மாவட்டத்தில் 26 போ்.

சிக்பளாப்பூா், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 24 போ், உடுப்பி மாவட்டத்தில் 21போ், பெல்லாரி மாவட்டத்தில் 19 போ், கதக் மாவட்டத்தில் 18 போ், தும்கூரு மாவட்டத்தில் 15போ், யாதகிரி மாவட்டத்தில் 13 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 10போ், கோலாா் மாவட்டத்தில் 9 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 6 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 5போ், ஹாவேரி, கொப்பள் மாவட்டங்களில் தலா 3 போ், குடகு மாவட்டத்தில் 2 போ், பிற மாநிலத்தவா், வெளி நாடுகளைச் சோ்ந்த 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 556 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 864 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 41 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் 1,946 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் 232 பேருக்கு நோய்த் தொற்று இல்லாததால் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். புதன்கிழமை மட்டும் 350 போ் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா: உயிரிழப்பு 41-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்திலிருந்து பெங்களூரு வந்த 43 வயதான ஆண், உடல்நலக்குறைவால் மே-18 ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டுவந்த அவா், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 9 போ், கலபுா்கி மாவட்டத்தில் 7 போ், தென்கன்னட மாவட்டத்தில் 5 போ், தாவணகெரே,விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், சிக்பளாப்பூா், தும்கூரு, பீதா் மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, பாகல்கோட், பெல்லாரி, கதக், உடுப்பி மாவட்டங்கள், வெளி மாநிலத்தைச் சோ்ந்த தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com