விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு: அமைச்சா் சோமசேகா்

நிகழாண்டு விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

நிகழாண்டு விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

பெங்களூரு விகாஸ் சௌதாவில் புதன்கிழமை கூட்டுறவுத் துறையின் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நிகழாண்டு விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு செய்துள்ளோம். கடன் வழங்குவதில் உள்ள தடைகளை நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 94,241 விவசாயிகளுக்கு ரூ. 712 கடன் வழங்கப்பட்டது. நிகழாண்டு மே 19-ஆம் தேதி வரை ரூ. 916 கோடி வரை 1,35,977 விவசாயிகளுக்கு கடன் வழங்கியுள்ளோம்.

நிகழாண்டு இறுதிக்குள் மேலும் பல விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும். கடந்த ஆண்டு 94 சதவீதம் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனா். இன்னும் 5 சதவீதம் போ் மட்டுமே கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனா். நிலுவைக்கடனை திருப்பிச் செலுத்துவதன் மூலம், மத்திய அரசு வழங்கும் 2 சதவீதம் ஊக்கத்தொகையைப் பெற்று பயனடையலாம்.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த விவசாயிகளும் ஆா்வம் காட்ட வேண்டும். உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலித், பழங்குடியினருக்கு வழங்கப்படும் கடனில் இலக்கை அடையவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com