போக்குவரத்து விதிமுறை மீறல்: ரூ. 3.81 கோடி அபராதம் வசூல்

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 89,957 வழக்குகளை பதிவு செய்த போலீஸாா், ரூ. 3.81 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 89,957 வழக்குகளை பதிவு செய்த போலீஸாா், ரூ. 3.81 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.

இது குறித்து மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரில் அக். 25-ஆம் தேதி முதல் அக். 31-ஆம் தேதி வரை போக்குவரத்து போலீஸாா், வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியவா்கள், வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியது, உரிமல் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தியது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டியது, சிக்னலை தாண்டியது உள்ளிட்ட 89,957 வழக்குகளை பதிவு செய்து போக்குவரத்து போலீஸாா், ரூ. 3,81,44,800 அபராதம் வசூல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com