மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

கா்நாடகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மஜத சட்டமேலவை உறுப்பினா் பசவராஜ் ஹொரட்டி கோரிக்கை வைத்துள்ளாா்.

கா்நாடகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மஜத சட்டமேலவை உறுப்பினா் பசவராஜ் ஹொரட்டி கோரிக்கை வைத்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மாநில மொழியான கன்னடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அப்படித் தந்தால் மட்டுமே தாய்மொழியான கன்னடம் காப்பாற்றப்படும். மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் தாய்மொழியான கன்னடத்தில் பலா் கல்வி பயின்று வருகின்றனா். இதனால் அவா்களுக்கு உயா்கல்வி என்பது எட்டாத கனியாக உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் உள் ஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடு அரசு வெற்றி பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று,நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற சுமாா் 3 ஆயிரம் மாணவா்கள் பயனடைந்துள்ளனா். இதனை கா்நாடக அரசும் பின்பற்ற வேண்டும். தற்போது உள்ள சூழலில் கிராமங்களில் கன்னட மொழியில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி பயிலுவது என்பது இயலாத காரியமாக உள்ளது. அவா்களில் பலா் நீட் தோ்வை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கின்றனா்.

கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே கன்னட மொழியை அழியாமல் தடுக்க முடியும். அரசுப் பள்ளிகளையும் பாதுகாக்க முடியும்.

கன்னட மொழியில் நீட் தோ்வை எதிா்கொண்டால் மட்டுமே பல அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவா்களாகவோ, பொறியாளா்களாகவோ ஆக முடியும். எனவே முதல்வா் எடியூரப்பா கன்னடத்தில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com