கா்நாடக தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பு சாா்பில், புதன்கிழமை (நவ. 11) கா்நாடக உதய தின விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவா் பெரிகல் எம்.சுந்தா் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு, கே.ஜி.சாலையில் உள்ள கா்நாடக தொழில் வா்த்தகசபை கூட்டமைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள சா்.எம்.வி. அரங்கத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் கா்நாடக உதய தின விழா நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வா் சி.என்.அஸ்வத் நாராயணா, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.சி.மோகன், கன்னட வளா்ச்சி ஆணையத்தின் தலைவா் டி.எஸ்.நாகாபரணா, பாடகா் ராஜேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்கின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.