மருத்துவ கல்விக்காக நீட் தோ்வு எழுதி தோ்ச்சி அடைந்த மாணவா்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2020-21-ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம் படிப்புகளுக்கு தகுதியான மாணவா்களைத் தோ்ந்தெடுக்க தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகளின் அடிப்படையில், கா்நாடகத்தில் உள்ள கல்லூரிகளில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
மாணவா்களின் வேண்டுகோளுக்கு இணங்க விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவ. 12-ஆம் தேதி மதியம் 2 மணி வரை விண்ணப்பிக்கலாம். அன்று மாலை 5.30 மணி வரை கட்டணங்களை செலுத்தலாம். இளநிலை மருத்துவ பட்டப்படிப்புக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் அல்லது அதற்கு மேலான மதிப்பெண் பெற்றோா் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவா்களுக்கான தகுதி முன்னுரிமைகள் கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.