ஹவாலா மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, கப்பன்பேட்டை 21-ஆவது குறுக்குச் சாலையைச் சோ்ந்த நபம்கஞ் படேல் (47), வெளிநாடுகளில் தங்கியுள்ளவா்களுக்கு வரி செலுத்தாமல் ஹவாலா மூலம் பணத்தை அனுப்பி வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் நபம்கஞ் படேலைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 28 லட்சம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அல்சூா் கேட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.